Consultation meeting on the CEDAW Shadow Report
WMC ஆனது CENWOR இல் 2009 ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீடோ அறிக்கை மீதான ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை வசதிப்படுத்தியது. இக் கூட்டத்திற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த WMC வலைப்பின்னல் நிறுவனங்களிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். கூட்டத்திலே 2002-2009 நிழல் அறிக்கையில் தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிகளவான பதில்கள் பங்குபற்றுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களால் கொடுக்கப்பட்ட சிபார்சுகள் எல்லாம் இறுதி அறிக்கையில் இணைக்கப்படுவதற்காக குறிப்பெடுக்கப்பட்டன. WMC ஆனது 2002-2009 சீடோ நிழல் அறிக்கையை … Continue reading Consultation meeting on the CEDAW Shadow Report
Consultative Forum on Increasing Women’s Political Participation at the local level in Sri Lanka
ஜுலை 2009 – உள்ளுர் மட்டத் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. விழுது, பெண்கள் அபிவிருத்தி நிலையம் யாழ்ப்பாணம் என்பவற்றுடன் கூட்டுழைப்புடன் WMC யினாலும், UNDP யின் அனுசரணையுடனும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் பங்குபற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் உட்பட 50 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் சில சவால்கள், உள்ளுராட்சியில் போட்டியிடுதல், ஆட்சி, … Continue reading Consultative Forum on Increasing Women’s Political Participation at the local level in Sri Lanka
Publication : Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka
பெண்கள் ஊடகக் கூட்டமைப்பானது International Alert இன் ஆதரவுடன ஐ.நா. பாதுகாப்புச் சமவாயம் 1325 இன் தந்திரோபாய ரீதியிலான நடைமுறைப்படுத்துகைக்காக இலங்கையில் பெண்களின் சமாதான செயற்பாடுகளை இணைக்கும் ஆய்வு ஒன்றைப் பொறுப்பெடுத்திருந்தது. இக் கருத்திட்டமானது இலங்கையில் பெண்கள் குழுக்களையும் அவர்களின் சமாதான முனைப்புக்களையும் இனங்காண்பதுடனும் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நிறுவனங்கள்/வலைப்பின்னல்கள் மற்றும் சமாதான முனைப்புக்களை இணைப்பதிலும் ஈடுபட்டது. இந்த அறிக்கையானது ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில் வெளியிடப்படுகிறது.
Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)
ஜனவரி, ஜுன் 2009 - WMC ஆனது 2007 ஆம் ஆண்டு இக் கருத்திட்டத்தை முன்வைத்ததுடன், இது பின்வரும் ஆண்டுகளில் உள்ளுராட்சி தொடர்பான பெண்களின் அறிவினை அதிகரிப்பதனையும், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்றுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும், நல்லாட்சியில் அவர்களுக்கு உதவி வழங்குவதையும் நோக்ககாகக் கொண்டிருந்தது. அவதானிப்புக் குழுக்கள் குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் தமது கண்காணிப்பு பணிகளை தொடர்ந்தன. அக்காலப்பகுதியில் பூர்த்தி செய்த நடவடிக்கைகள் பின்வருமாறு. அவதானிப்புக் குழுக்களானவை அவர்களின் … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)
WMC condoles demise of Caroline Anthony Pillai
புகழ்பெற்ற இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகிய கரோலின் அந்தோனிப்பிள்ளையின் மறைவை ஒட்டி WMC ஆனது 2009ஜுலை 6 ஆம் திகதி வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் அனுதாபம் தெரவித்திருந்தது.
“Women Together” Meeting
2009 ஜுலை 08 ஆம் திகதி கொழும்பிலுள்ள பல பெயர்போன பெண்கள் நிறுவனங்களிலிருந்தான பல எண்ணிக்கையான செயற்பாட்டாளர்கள் WMC வில்’ஒன்றிணைந்தபெண்கள் ‘என்ற கூட்டத்தில் பங்குபற்றினர். இக் கூட்டமானது முஸ்லிம் பெண்கள் ஆய்வுக் கூட்டத்தால் (MWRAF) மற்றும் WMC யினால் வசதிப்படுத்தப்பட்டிருந்தது. 24 பெண்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
Media Statement- Protest letter on abduction of journalist Krishni Ifham
2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
Meeting with Women’s Groups
2009 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி இலங்கையின் பல பெண்கள் நிறுவனங்களிலிருந்தான பெண் செயற்பாட்டாளர்கள் WMC ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். மொத்தமாக 30 பெண்கள் பல நிறுவனங்களிலிருந்து இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். இக் கூட்டமானது ஒரு கலந்துரையாடல் வடிவத்தில் எல்லாப் பங்குபற்றுனர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவைகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் குறித்து தமது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.