Category: Activities Politics

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

ஜனவரி, ஏப்ரல்  2008
 – 
WMC ஆனது இந்நிகழ்ச்சித்திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் தொடக்கியதுடன் இது 2008 ஆம் ஆண்டு வரை பெண்களின் உள்ளுராட்சி அறிவினை அதிகரித்தல், உள்ளுராட்சி தேர்தல்களில் அவர்கள் போட்டியிடுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சியில் அவர்கள் ஈடுபட உதவுதல், என்பவற்றை இலக்குகளாகக் கொண்டு தொடரப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளை கண்காணிப்பதை தொடர்ந்தன. மொத்தத்தில் 3 மாவட்டங்களிலும் 14 உள்ளுராட்சி சபைகள் 25 பெண் அவதானிப்பாளர்களால் … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

Encounter group-project

பெப்ருவரி, மார்ச்
 – 
WMC ஆல் முன்னெடுத்துச் செல்லப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் இவ் உத்தேச எதிர்கொள்ளல் குழுவானது அம்மக்கள் தமது எண்ணங்களை முன்வைக்கவும், கலந்துரையாடவும், முரண்படவும் இணக்கங்காணவும் ஒரு வழியை உருவாக்குவதுடன் (முரண்பாட்டின் உண்மையான அசலான மரியாதைமுறையிலான, தன்னிலை ரீதியிலான  யதார்தங்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும்) நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஒக்ரோபர் மாதத்திலிருந்தே ஆரம்பக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. எதிர்கொள்ளும் குழுவானது மக்களுக்கு, எந்த இடத்திலும் வரவேற்கப்படாத அவர்களது அமுக்கப்பட்ட யதார்த்தங்களை, அவர்கள் குரல் எழுப்பக்கூடிய பாதுகாப்பான சூழலை, இந்த எதிர்கொள்ளல் குழு … Continue reading Encounter group-project

We Women campaign

ஜனவரி
 
- WMC ஆனது  ஜனவரி மாதத்து “நாங்கள் பெண்கள்” கூட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பெண்கள் என்பது 2008 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடிய நிகழ்வில் ஒன்றாகக் கூடிய தனிப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் ஒரு கூட்டிணைவாகும். இக் கூட்டிணைவை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில் இலங்கையிலே சிவில் யுத்தம் பொருளாதார தாராண்மை மயப்படுத்தலும் உலகமயமாக்கலும் பெண்களுக்கான கணிசமான சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதில் எழுந்துவரும் சவால்கள், எதிர்காலத்திற்கான உபாயங்களை மீளச் … Continue reading We Women campaign

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசெம்பர் 2007
-WMC ஆனது இக்கருத்திட்டத்தை உள்ளுராட்சி குறித்த  அறிவைப் பெண்களிடையே அதிகரித்துக் கொள்வதையும், உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும் நல்லாட்சியை இயலச் செய்வதில் அவர்களுக்கு உதவுவதற்காகவும், இலக்குகளைக் கொண்டு இக்கருத்திட்டத்தை முன்னெடுத்தது. மொத்தத்தில் 14 உள்ளுராட்சி சபைகளானவை 3 மாவட்டங்களில் 25 பெண் அவதானிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை பதுளை பெண்கள் வள நிலையம், மொனராகலை ஊவா வெலிசா கமி காந்தா நிறுவனம் மற்றும் குருணாகலை பெண்கள் வள நிலையம் என்பவற்றிலிருந்து தெரிவு … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

நவம்பர் 2007 – 
இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு  செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் … Continue reading NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

Protest to stop eviction of Tamils from Colombo

ஜுன்  8 – 2007 
நிறுவனங்களையும் தனிநபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்திலிருந்தான அக்கறையுடையோர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் 12.00 – 1.00 மணி வரைஎதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினர்.தமிழர்களை கொழும்பின் தங்குமிடங்களில் இருந்து விரட்டி 300 க்கு மேற்பட்ட தமிழர்களை அவர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களிலிருந்து விரட்டி, யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைப்பதற்கு ஜுன் 7 ஆம் திகதி அரசு நிர்ப்பந்தித்ததற்கு எதிராகவே இதை நடத்தினர். WMCவும் இந்நிகழ்விற்கு வசதிப்படுத்திய குழுக்களில் அடங்கியிருந்தது. 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

Protest against abductions and the two Red Cross staff who were killed

ஜுன் 6 
 WMC யினர் “உங்களின் கவலையை நாங்கள் பகிரந்துகொள்கின்றோம்” “வாழும் உரிமையைப் பாதுகாப்போம்” மற்றும் “பொதுமக்களைக் கொலைசெய்வதை நிறுத்து” எனச் சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டிருந்தனர். கடத்தல்களையும், கொலைகளையம் தாம் அங்கீகரிக்காததைக் காட்டும் முகமாக போராட்டம் செய்தோர் கறுத்த முகமூடிகளால் தமது வாயை மூடியிருந்தனர்.

Billboards on the Prevention of Domestic Violence Act

ஜனவரி 2007, ஆகஸ்ட் 2007
  –  WMCஆனது இலங்கை ஒக்ஸ்பாம்  மற்றும் ‘எம்மால் முடியும்’ பிரச்சாரத்தி உதவியுடனும் நாடு பூராகவும் 8 இடங்களில் விளம்பரப்பலகைகளைக் காட்சிப்படுத்தியது. (வடக்கைத் தவிர) விளம்பரப் பலகைகளை 2007 மேயில் இருந்து மூன்று மாதங்களுக்கு காட்சிப்படுத்தியது. சிங்கள மொழி விளம்பரப் பலகைகள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், வெலிசறவிலும், தமிழ்மொழி விளம்பரப்பலகைகள் திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, ஹட்டனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
சிங்கள மற்றும் தமிழ் விளம்பரப் பலகைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007