மேடை அரங்காற்ருவோர் குழுவானது WMC வினை அணுகி அவர்களின் அடுத்த அரங்கத் தயாரிப்புக்காக நிதி ஆதரவு கேட்டிருந்தனர். அது 2008 மார்ச் 08 – 12 ஆம் திகதி வரை நிகழ்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த தலைப்புக்களாக, குடும்ப வன்முறை மற்றும் இன முரண்பாடு என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் நோக்கமானது வேறுபட்ட நோக்கங்கள் உள்ள ஆட்களை கருத்துக்களைப் பரிமாறுவதற்கு தூண்டுவதும், ஒரு பொதுவான பிரச்சினையை வேறுபட்ட கருத்துடையவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை பார்க்கத் தொடங்குவதுமாகும். அரங்காற்றுகை நடைபெற்ற இரவுகள் எல்லாம் மண்டபம் முற்றுமுழுதாக நிரம்பியிருந்தது. ஒவ்வொரு இரவும் தலைப்புக்கான கலந்துரையாடல் வேறுபட்டு இருந்ததுடன் அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கலந்துரையாடலிலும், விவாதங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.