இளைய, மற்றும் முதிர்ந்த செயற்பாட்டாளர்கள்/பெண்ணிலை வாதிகளுக்கான ஒரு தலைவர்களுக்கிடையிலான கூட்டமானது WMC வில் 2009 மார்ச் 23 ஆம் திகதி அன்று நடைபெற்றது. இவ் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் இலக்கானது, இளைய மற்றும் முதிர்ந்த பெண்களிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதையும் முரண்பாடு, வன்முறை மற்றும் குற்றம் தண்டிக்கப்படாமை போன்ற பொதுவான அக்கறைகளுடன் ஈடுபடுவதற்கான சாதகமான தந்திரோபாயங்களை கலந்துரையாடுவதற்காகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலானது முறைசாராததாகவும், இளைய, முதிர்ந்த பங்குபற்றுனர்களுடன் ஊடாடுவதாகவும் முரண்பாட்டின் தம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் மிகவும் சாதகமான முறைகளைக் கலந்துரையாடுவதாகவும் அமைந்திருந்தது.