2010 ஆகஸ்ட் 18 – 20 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இயலுமையுடைய பெண் வேட்பாளர்களுக்காக ஒரு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது. குருணாகலை, புத்தளம், மொனராகலை, பதுளை, காலி போன்ற இடங்களிலிருந்து 40 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றினர். ஊடகத்தை எதிர்கொள்ளல், அச்சூடகங்களில் தங்களை வெளிப்படுத்துதல், பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சுக்கள் போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் பயிற்றப்பட்டனர்.