நாட்டின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் ஒன்றுகூடி, 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் திகதி தொழிற்சங்கப் பெண்களின் எதிர்காலத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தும் பிரதான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடின. தொழிற்சங்கப் பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் முப்பத்தியெட்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பிடமும், அதன் வலையமைப்புடனும் பகிர்ந்து கொண்டனர். வலையமைப்பாதல் மற்றும் அணி திரளல் தொடர்பில் பெண்களுக்கு கற்பிப்பதற்கு சட்டத்தரணி ஷாமிளா தளுவத்தையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.