WMC Women’s Photography Exhibition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட “பெண்களின் போராட்டங்கள் , பெண்களின் பெருமை” எனும் மகுடத்தின் கீழான கண்காட்சியுடன் இணைந்ததாக, 2014ஆம் ஆண்டுக்கான பெண்களின் புகைப்படக் கண்காட்சியும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சி 2015 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.

“உழைக்கும் பெண்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் துறைசார்ந்த மற்றும் துறை சாராத சுமார் 30 பெண்களின் புகைப்படங்களை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி அமைந்தது. சந்திரகுப்தா தேநுவர மற்றும் அவரது குழுவினரால் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டது.

சிறப்புத் தகைமைக்கான விருதுகளை வென்றவர்கள் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய இணைப்புக்கள்