செப்ரெம்ர் 21 சர்வதேச சமாதான தினத்தையொட்டி பெண்கள் சமாதானப் பவனியானது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பு, பொலநறுவை, கண்டி, புத்தளம், குருணாகலை, பலாங்கொடை, கலேவெல, காலி, பத்தல, பதுளை, ஹற்றன், மகியங்கணை, ஜா எல, மற்றும் கொழும்பு உட்பட தீவின் பல பாகங்களில் இருந்தும் பெண்கள் ஒன்றுகூடினர். இச்சமாதானப் பவனியானது சர்வதேச சமாதான தினத்தை நினைவு கூருவதற்காகவும் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் சமாதானத்திற்கான தமது அர்ப்பணிப்பைக் காட்டுவதற்காகவும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள தொடங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவும் நடாத்தப்பட்டது. இப்பவனியானது சமாதானச் செய்திகள் இணைக்கப்பட்ட வர்ண பலூன்கள் விடுவிக்கப்பட்டதுடன், முடிவுக்கு வந்தது. குழுவினர் சமாதானப் பதாதைகளுடன் விகாரமாதேவி பூங்காவைச் சூழ அணிவகுத்து வந்தனர். புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்குக.