WMC மற்றும் சமூக விஞ்ஞானிகள் சங்கம் ஒக்ரோபர் 08ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கரோலின் அந்தோனிப்பிள்ளையை கௌரவிக்கும் முகமாக ஒரு கட்டுரையை பிரசுரித்தது. இவர் இலங்கை சம சமாஜ கட்சியின் ஸ்தாப உறுப்பினராகவும், 1930 களில் சிலோன் தேசியவாதிகள் இயக்கத்தின் துடிப்பான பங்குபற்றுனராகவும் இருந்திருந்தார். இக்கட்டுரையானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.