பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரான வன்முறையை எதிர்கொள்ளும் நோக்கில் வுமன் இன் நீட் நிறுவனத்தின் ஆதரவுடன் “வோக்ட் ஃபோ வின்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு இணைந்தது. நடிகர்கள், இசைக் கலைஞர்கள், இளம் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆகஸ்ட் 30இல் 500இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர். ஒற்றுமையின் பிரதிபலிப்பாக நிகழ்வின் இறுதியில் அவர்களுக்கு கருப்புபோல்கா உருவங்கள் அடங்கிய இளஞ்சிவப்பு சால்வை வழங்கப்பட்டது. சி.எச் அன்ட் எப்.சி மைதானத்தில் இருந்து, நெளும் பொக்குன (தாமரைத் தடாகம்) ஊடாக விஜேராம மாவத்தையினால் மீண்டும் சி.எச் அன்ட் எப்.சி மைதானத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தது.