ஊடகவியலாளர்களுக்கான மாநாடுகள்,செயலமர்வுகள், பயிற்சிகள் நடத்துவதில் இருந்து அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் தடுக்கும், முன்னனுமதி இன்றி ஊடக அறிக்கைகள் வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிராக கொழும்பு புகையிரத நிலையத்திற்குமுன்னால் சிவில் சமூக அமைப்புக்கள் நேற்று போராட்டம் நடத்தின.
சுற்றுநிரூபமானது அவர்களின் ஒன்றுகூடல் மற்றும் சந்தித்தல் சுதந்திரத்தைப் பாதிப்பதனால் “சிவில் சமூகத்தின் மீது கை வைக்காதே” என அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன.