வடக்கு கிழக்கிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்வதில் ஏற்படுத்தப்பட்ட தடைக்கு பதிற்செயற்பாடாக 2006 ஏப்ரல் 26 ஆம் திகதி WMC ஆனது 65 பெண்களின் கைச்சாத்துடன் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. இவ் கைச்சாத்துடன் கூடிய அதே அறிக்கையானது ஜனாதிபதிக்கும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கும், வடக்கு கிழக்கு விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.