WMC ஆனது 2006 ஜுன் 21 ஆம் திகதியன்று வீட்டு வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துவது மீதான ஊடகத் தந்திரோபாயங்களை இனங்காணுவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. ஊடக நிறுவனங்கள் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்குபற்றினர். இக்கூட்டமானது வீட்டு வன்முறை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் புதிதாக சட்டமாக்கப்பட்ட சட்டம் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டு வன்முறை தடைச்சட்டத்தை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை கொண்டுள்ள ‘பெண்கள் தேசியக்குழுவின்’ வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகமாகவே நடைபெற்றது.