WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.