National Level Press Briefing

WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் நியமனங்களப் பெற்றுக்கொள்வதில் வெற்றியடைந்தனர். பத்திரிகையாளர் மகாநாட்டில் வேட்பாளர்கள் தங்களைத் தாமே அறிமுகம் செய்துகொள்வதற்கும், நியமனம் வரை முன் செல்வதற்கும் பிரதான ஊடக ஆட்களுடன் முன்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 195 உள்ளுராட்சி மட்ட கட்சித் தலைவர்களையும், இவ் எல்லா 5 மாவட்ட பிரதான அரசியல் கட்சிகளில் இருந்தும் மற்றும் 48 தேசிய மட்ட கட்சித் தலைவர்களையும், நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் சமஅளவான பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக WMC வினர் சந்தித்துக்கொண்டனர்.