Peace Vigil to coincide with Norwegian Facilitator’s visit to Jaffna

2006 ஜனவரி 23 ஆம் திகதி சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது நோர்வேஜிய மத்தியஸ்தர் எரிக் சொல்ஹைம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில் வவுனியாப் நகரில் தமது இரண்டாவது சமாதானப் பவனியை நடத்தினர். ஆனாலும் ஜனவரி 21 ஆம் திகதி சனிக்கிழமை அடம்பனில் நடைபெற்ற தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்புக்காரணங்களின் நிமித்தம் அவர்கள் தமது சமாதானப்பவனியை லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 300க்கு மேற்பட்ட பெண்கள் குருநாகலை, புத்தளம், கண்டி, பொலநறுவை, அனுராதபுரம் போன்ற வேறுபட்ட மாவட்டங்களிலிருந்து விஹாரமாதேவி பூங்காவில் கூடிலிப்டன் (லிப்டன்) சுற்றுவட்டத்திற்கு பவனியாகச் சென்றனர். இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பலப்படுத்தும்படியும் மௌனமாக வேண்டுகோள் விடுத்தனர். சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பினர் பின்பு நோர்வே தூதரகத்திற்கு தொடர்ந்து சென்று திரு சொல்ஹைம் அவர்களிடம் அதிகரித்துவரும் வன்முறைக்கு ஒரு முடிவுகாணுமாறும் சமாதானத்திற்கு மீண்டும் செல்லுமாறும் ஒரு மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.