“வெள்ளித் திரைக்கு அப்பால்” எனும் எட்டு அங்க வானொலி நாடகமானது சிங்களத்தில் உருவாக்கி தயாரிக்கப்பட்டு சிங்கள வர்த்தக சேவையில் ஒலிபரப்பப்பட்டது.சமாதானச் செயன்முறையின் தாக்கம் தனிநபர்கள், சமூகங்கள் மீது எவ்வாறு இருந்தன என்பதைபற்ரியதாகும். குறிப்பாக எவ்வாறு சமாதானமானது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதையும், யுத்தத்தின் பின்விளைவுகளையும் கலந்துரையாடியது. இதன் பிரதியானது ககத்தலின் ஜெயவர்த்தன (Kathline Jayawardena) அவர்களால் எழுதப்பட்டதுடன் மஹிந்த அல்கம (Mahinda Algama) வினால் தயாரிக்கப்பட்டது.