செப்ரெம்பர் 21 – 2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.