WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு, சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.