2006
The SLWNGOF was the key women’s organization which, through a consultative process nationally sent in its recommendations for the proposed reforms of the UN in relation to the Gender Equality Architecture.
The SLWNGOF was the key women’s organization which, through a consultative process nationally sent in its recommendations for the proposed reforms of the UN in relation to the Gender Equality Architecture.
ஆகஸ்ட் 4 – ஒக்ரோபர் 4 வரை புதன்கிழமைகளிலே WMC உட்பட்ட பெண்கள் மனிதநேய மற்றும் மனிதஉரிமை நிறுவனங்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சமாதானப் பவனி லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச சனசமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் நடைபெறும் யுத்தம் மற்றும் அரசியல் கொலைகளுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்குக.
செப்ரெம்ர் 21 சர்வதேச சமாதான தினத்தையொட்டி பெண்கள் சமாதானப் பவனியானது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பு, பொலநறுவை, கண்டி, புத்தளம், குருணாகலை, பலாங்கொடை, கலேவெல, காலி, பத்தல, பதுளை, ஹற்றன், மகியங்கணை, ஜா எல, மற்றும் கொழும்பு உட்பட தீவின் பல பாகங்களில் இருந்தும் பெண்கள் ஒன்றுகூடினர். இச்சமாதானப் பவனியானது சர்வதேச சமாதான தினத்தை நினைவு கூருவதற்காகவும் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் சமாதானத்திற்கான … Continue reading Women’s Peace Vigil for International Peace Day
செப்ரெம்பர் 8 – இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் INFORM என்பன கூட்டாக மனிதஉரிமைகள் மற்றும் பெண்களின் மனிதநேய அக்கறைகள்” எனும் ஆவணத்தை 2006 செப்ரெம்பர் 12 ஆம் திகதி Brussels இல் நடைபெற்ற இணைத்தலைமை கூட்டத்தில் கூட்டாக சமர்ப்பித்திருந்தனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிபுணர்கள் குழுவிடம் பால்நிலை விடயங்கள் தொடர்பான பல்வேறு பெண்கள் குழுக்களால் நியமிக்கப்பட்ட விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. கூற்றைப் பார்க்குக.