WMC ஆனது இலங்கையின் 2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் 7வது பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்ட 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் TissaKaraliyadde இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சுமேதா ஜயசேன, நிருபமா ராஜபக்ஷ, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை, றோசி சேனநாயக்க, மாலனி பொன்சேகா, கமலா ரணதுங்க, தலதா அத்துக்கோரள, சிறியானி விஜேவிக்கரம, சந்திரானி பண்டார, அனோமா கமகே, மற்றும் உப்பெக்ஷா சுவர்ணமாலி என்போர் கௌரவிக்கப்பட்டனர். அமைச்சர் அத்துக்கோரள தனது பேச்சில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை நோக்கி உழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.