இலங்கையின் சகல அரசியல் அங்கங்களிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 25% இனால் அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கிய சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர்களைக் கொண்ட பிரசார முன்னெடுப்பொன்று மகளிர் உரிமைக் குழுக்களினால் சர்வதேச மகளிர் தினம் 2015ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது.
பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றை தாபிப்பதற்குள்ள பாரிய தேவைப்பாட்டையும்கூட இந்த மகளிர் உரிமைக் குழுக்கள் வலியுறுத்தின.