2005 டிசம்பரில் சமாதானத்திற்கும் ஜனநாயத்திற்குமான இலங்கைப் பெண்கள் (SLWPD), எனும் பெண்கள் அமைப்பின் குழுவொன்று WMC வின் உதவியுடன் “வாழ்க்கை இறப்பு அல்ல; சமாதானம் யுத்தமல்ல” என்ற கருப்பொருளில் ஒரு சமாதானப் பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பாதிப்பும் முடிவுக்கும் கொண்டுவர வேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஒவ்வொரு மாதமும் இச்சமாதானப் பிரச்சாரம் தொடர்ந்ததால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கொழும்பு லிப்ரன் (லிப்டன்) சுற்று வட்டத்தில் ஒன்றுகூடி ஒரு குரலில் வன்முறையையும் கொலைகளையும் யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்திற்கு திரும்புமாறு வேண்டிநின்றனர்.